கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மிக்ஜாம் புயலால் சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது . இதனால் சென்னை மக்கள் அன்றாட தேவைக்கே வழி இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர் . இந்த நேரத்தில் பல பிரபலங்கள் களத்தில் இறங்கி தங்களால் முடிந்த உதவிகளை செய்திருந்தனர் .இந்நிலையில் தற்போது வெள்ள நீர் எல்லாம் வடிந்து சென்னை பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து பல ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது . அந்த வகையில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் இப்படி ஒரு கனமழை பெய்து இருக்கிறது.
இதனால் தூத்துக்குடி பகுதியில் உள்ள எல்லா கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளது . இதனால் படகுகளில் கூட அந்த இடத்திற்கு செல்ல முடியவில்லையாம் . அந்த அளவிற்கு வேகமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறதாம் . இதனால் எப்படியாவது அவர்களை,
காப்பாற்றி விடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கும் , அவருடைய மகனான உதயநிதி ஸ்டாலினுக்கும் கோரிக்கை வைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்…