தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல இளம் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது அவருடைய இரண்டாவது படமான ரஜினி முருகன் ,
படத்தின் மூலம் தான். இந்த படத்தை தொடர்ந்து தொடரி ,ரெமோ ,பைரவா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் கீர்த்தி சுரேஷ் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள,
மொழி படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியானது. காரணம் நேற்று கேரளாவில் எம்எல்ஏ நடத்திய நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டதால் ,
அவர் அரசியலில் களம் இறங்க உள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அது மாணவர்களுக்காக நடத்திய நிகழ்ச்சி . அதனால் தான் அந்த நிகழ்ச்சியில் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் .
அந்த புகைப்படங்களை தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …