ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு வந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்கள். வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் பிரசாந்த் .பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் பிரசாந்த் . குறிப்பாக அப்போது இவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாக,
இருந்து வந்தனர் . அது மட்டுமல்லாமல் அப்போது விஜய் அஜித்துக்கு போட்டியாக இருந்து வந்தார் நடிகர் பிரசாந்த் . ஆனால் இப்படி இவர் வளர்ந்து வரும் நேரத்தில் அவருடைய உறவினர் மகன் ஒருவருக்கு உதவி செய்யாமல் ஒதுக்கி இருக்கிறார் . தற்போது அந்த நடிகர்,
உச்ச நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு வருகிறாராம். அவர் வேறு யாருமில்லை நடிகர் விக்ரம் தான். நடிகர் பிரசாந்தின் அப்பாவான தியாகராஜனின் உறவினர் மகன் தான் நடிகர் விக்ரம். அப்படி பிரசாந்த் கொடி கட்டி பறந்து வந்த நேரத்தில் தான் விக்ரம் சினிமாவிற்கு,
அறிமுகமாகியுள்ளார் . ஆனால் ஆரம்பத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்த நேரத்தில் விக்ரமுக்கு பிரசாந்தும் சரி , அவருடைய அப்பாவும் சரி எந்த ஒரு உதவியும் செய்யவில்லையாம் . இதனால் உறவே வேண்டாம் என்று ,
வெறுத்துப் போன நடிகர் விக்ரம் தனியாளாக போராடி இன்று உச்ச நடிகராக கொடி கட்டி பறந்து வருகிறார். ஆனால் நடிகர் பிரசாந்த் தற்போது மார்க்கெட் இல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் இதுதான் கர்மா போல என்று கூறி வருகின்றனர்…