தென்னிந்திய சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு வருபவர் தான் நடிகை சமந்தா. தமிழில் வெளியான பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா பல சூப்பர் ஹிட் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் . அதோடு தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னி யாகவும் இருந்து வருகிறார் நடிகை சமந்தா. இதனிடையே தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா.
ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . விவாகரத்துக்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த சமந்தாவுக்கு திடீரென அரிய வகை நோய் ஒன்று வந்தது. இதனால் படாத பாடுபட்டு வந்த சமந்தா பழையபடி மீண்டும் படங்களில் நடித்த தொடங்கியுள்ளார் . அந்த வகையில் ,
தற்போது குஷி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகை சமந்தா . இந்த படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார் . இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற உள்ளதாம் . அதற்காக சமந்தாவுக்கு 30 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக,
தகவல் வெளியாகி உள்ளது . அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் சமந்தாவுக்கு பக்கத்தில் அமர்ந்து பார்ப்பதற்கு இத்தனை லட்சமாம் . அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் சமந்தாவுக்கு பக்கத்தில் அமர்ந்து பார்ப்பதற்கு ஒரு ஆளுக்கு இரண்டு லட்சமாம். ஆனால் இதில் ஆச்சி ரியம் என்னவென்றால்,
இப்படி அறிவித்து சில நிமிடங்களிலேயே அந்த நிகழ்ச்சிக்கான மொத்த டிக்கெட்களும் தீர்ந்து விட்டதாம். இதைப் பார்த்த ரசிகர்கள் பக்கத்தில் ஒக்காரவே இத்தனை லட்சமா .? இது என்ன பகல் கொள்ளையா இருக்கு என்று கூறி வருகின்றனர் …