தற்போது உள்ள பெரும்பாலான நடிகைகள் படத்தில் நடிப்பதற்கு வாங்கும் சம்பளத்தை விட குத்தாட்டம் போடுவதற்கு தான் அதிக சம்பளம் வாங்கி வருகிறார்கள். அப்படி வெறும் 30 நொடிகள் ஆடுவதற்கு இரண்டு லட்சம் கேட்டிருக்கிறார் பிரபலம் ஒருவர் . அந்த வகையில் தமிழ் திரை உலகில் பிரபல பாடலாசிரியராக இருந்து வருபவர் பிரியன். இவர் அரணம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் ,
இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் மேடையில் பேசிய பிரியன் கூறியதாவது , வெறும் 30 நொடிகள் நடனமாடுவதற்கு கேரளா பொண்ணு இரண்டு லட்சம் கேக்குது , அது மட்டுமல்லாமல் பிளைட் டிக்கெட் எல்லாம் கேக்குது.
நானே இன்னும் பிளைட்டில் போனது கிடையாது என்று கூறியிருந்தார். இதன்பிறகு அந்த பெண் யார் என்று கேட்டதும் அவர் வேறு யாரும் இல்லை அமலா ஷாஜி தான் என்று கூறியிருந்தார் பாடலாசிரியர் பிரியன்…