April 25, 2024

ரவீந்தருக்கு என்ன ஆச்சு ..?? இவருக்கு இப்படியொரு பிரச்சனையா ..?? வெளியான புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் பிரபல தயாரிப்பாளராக இருந்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகர் . சுட்ட கதை என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் ரவீந்தர். பின்னர் இந்த படத்தை  தொடர்ந்து நளனும் நந்தினியும், நட்புனா என்னன்னு தெரியுமா ,முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து இருந்தார் . இதனிடையே பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமியை இரண்டாம் திருமணம் ,

செய்து கொண்டார் ரவீந்தர் . இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதால் பலரும் இவர்களை கேலி செய்தார்கள் . ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருவரும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து வந்தனர் . ஆனால் சமீபத்தில் பணமோசடி வழக்கில் ,

ஜெயிலுக்கு சென்று வந்தார் ரவீந்தர் . இப்படி இருக்கும் நிலையில் எப்போதும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்வதை வழக்கமாக வைத்திருந்தார் ரவீந்தர் .அப்படி சமீபத்தில் முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் உடன் உட்கார்ந்து ரிவ்யூ செய்து இருக்கிறார் ரவிந்தர்.

இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர் . மேலும் ரவீந்தருக்கு நுரையீரல் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம் . இதனால் நெஞ்சு வலியும் இருந்ததால் ஐ சி யு வில் ஒரு வாரமாக இருந்தாராம் . தற்போது வீட்டுக்கு வந்த ரவீந்தர் ஆக்சிஜனை சமநிலையில் வைத்துக் கொள்வதற்காக,

அந்த மாஸ்க் அணிந்திருக்கிறாராம் . அப்படி வீட்டில் ஓய்வு எடுக்காமல் அந்த மாஸ்க் உடன் பிக் பாஸ் ரிவ்யூ செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் ரவீந்தர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *