மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு விஜய் பிரபாகர் ,சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் . இதில் மூத்த மகனான விஜய் பிரபாகர் சொந்தமாக தொழில் செய்து வருகிறாராம். இளைய மகனான சண்முக பாண்டியன் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை .
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மதுரவீரன், தமிழன் என்று சொல் போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகர் சண்முக பாண்டியன் . இப்படி இருக்கும் நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சண்முக பாண்டியன்.
இந்நிலையில் அண்ணன் கேப்டன் விஜயகாந்தின் மகனுக்காக நான் இதை செய்யப் போகிறேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ் . அந்த வகையில் அவர் கூறியதாவது , சினிமாவில் எத்தனையோ நடிகர்களை கரையேற்றி விற்றவர் அண்ணன் விஜயகாந்த் அவர்கள்.
அதனால் அவருடைய மகனான சண்முக பாண்டியனுக்கு என்னால் முடிந்த உதவியை செய்யலாம் என்று எனக்குள் தோன்றியது . அதனால் அவருடைய படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறேன் . அதோடு எந்த இயக்குனரிடமாவது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் கதை இருந்தால்,
அதில் நானும் சண்முக பாண்டியனும் நடிப்பதற்கு தயார் என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் விஜய், சூர்யாவுக்கே தோன்றாத விஷயத்தை செய்து மீண்டும் சொக்கத்தங்கம் என்று நிரூபித்து விட்டார் ராகவா லாரன்ஸ் என்று கூறி வருகின்றனர்…
I’m happy to share with you all that I’m ready to do a cameo role in captain sir’s Son Shanmuga Pandian’s movie as my respect and love for Vijayakanth sir 🙏🏼 pic.twitter.com/zIlNBqnVs2
— Raghava Lawrence (@offl_Lawrence) January 10, 2024