தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சுறா . இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து தமன்னா ,வடிவேலு ,தேவ் கில் ,யுவராணி ,ரியாஸ் கான் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . நடிகர் விஜய்யின் ஐம்பதாவது படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது .ஆனால் இந்த திரைப்படம்,
வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகி 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தை பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார் நடிகை தமன்னா. அதில் அவர் கூறியதாவது , நான் நடித்ததிலேயே மிகவும் மோசமான திரைப்படம் என்றால் அது சுறா தான் .
அந்தப் படத்தில்தான் நான் ரொம்ப கேவலமாக இருந்தேன் . இனிமேல் இது போன்ற படங்களிலும் நடிக்கவே மாட்டேன் . அந்த படத்தில் நடிக்கும் போதே இந்த திரைப்படம் ஓடாது என்று எனக்குத் தோன்றியது , இருந்தாலும் அந்த படத்தில் கமிட் டாகி விட்டதால் நடித்துக் கொடுத்திருந்தேன் என்று கூறியிருந்தார்…