May 1, 2024

30 வரு டமாக சினிமா வில் இருந் தும் சொ ந்த வீடு இல் லை ..!! இன் னும் வாட கை வீட் டில் வசி க்கும் பார் த்திப ன் ..!! கார ணத் தை கே ட்டு ஷா க்கா ன ரசி கர் க ள் ..!!

பொதுவாகவே சினிமா நடிகர்கள் என்றால் மிகவும் ஆடம்பரமாக தான் இருப்பார்கள் என்ற பேச்சு உள்ளது.  ஆனால் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேலாக இருந்தும் இன்னும் வாடகைக்கு வீட்டில் தான் இருந்து வருகிறாராம் ஒரு நடிகர்.  அவர் வேறு யாருமில்லை இயக்குனரும்,  நடிகருமான பார்த்திபன் தான்.  ஆரம்பத்தில் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக ,

பணியாற்றி வந்த பார்த்திபன் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரை பதித்த பார்த்திபன் தொடர்ந்து சுகமான சுமைகள் ,உள்ளே வெளியே,

ஹவுஸ் ஃபுல் ,கதை திரைக்கதை வசனம் , ஒத்த செருப்பு , இரவின் நிழல் போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார் . இப்படி இயக்குனராக கலக்கிக்கொண்டு வந்த பார்த்திபன் ஒரு சில படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் ,

நடித்துக் கொண்டு வருகிறார்.  இதனிடையே நடிகை சீதாவை திருமணம் செய்து கொண்ட பார்த்திபனுக்கு இரண்டு மகள்கள் , ஒரு மகன் உள்ளனர் . பின்னர் விவாகரத்து ஆனதாலிருந்து தனியாக தான் வாழ்ந்து வருகிறாராம் பார்த்திபன் .  மேலும் சினிமாவில் 30 வருடங்களாக,

இருந்தும் இன்னும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறாராம் பார்த்திபன்.  அதற்கு காரணம் அவருக்கு ஆடம்பர வாழ்க்கை என்பது சுத்தமாக பிடிக்காதாம் . அதனால் தான் இன்று வரை சொந்த வீடு கட்டாமல் வாடகை வீட்டில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *