April 28, 2024

படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் வில்லன் தான் ..!! ஜெயிலர் வில்லனை கைது செய்த போலீஸ் ..!! காரணத்தை கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க ..!!

கடந்த ஆகஸ்ட் மாதம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் ஜெயிலர் . இந்தப் படத்தில் வர்மன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் மலையாள நடிகரான விநாயகன் .  மேலும் இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான திமிரு என்ற படத்தின் மூலம் ,

தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சிலம்பாட்டம் ,எல்லாம் அவன் செயல்,  காளை , சிறுத்தை,  மரியான் போன்ற படங்களிலும் நடித்திருந்தார் நடிகர் விநாயகன் .  மேலும் இவர் தமிழ் தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி,

படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் இவர் படத்தில் தான் வில்லன் என்று பார்த்தால் நிஜத்திலும் வில்லனாகவே இருந்திருக்கிறார் . அந்த வகையில் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் குடிபோதையில் விநாயகன் தகராறு செய்ததாக ,

தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் அவருடைய குடியிருப்பில் ஏதோ பிரச்சனை செய்தார் என்று போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.  அப்போது காவல் நிலையத்தில் விநாயகன் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இதற்கு முன்பு பல சர்ச்சைகளில் சிக்கி இருந்த விநாயகர் ஜெயிலர் படத்திற்குப் பிறகு நல்ல பெயரை சம்பாதித்து இருந்தார்.  ஆனால் தற்போது குடிபோதையில் அதையும் கெடுத்துக்கொண்டார் நடிகர் விநாயகன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *