90 களில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர் தான் நடிகர் பிரசாந்த் . இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் ஒரே மகரான பிரசாந்த் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து செம்பருத்தி ,ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் ,ஜோடி ,ஆசையில் ஒரு கடிதம், பிரியாத வரம் வேண்டும் ,
போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக அப்போது பெண்களின் கனவு கண்ணனாக இருந்து வந்தார் பிரசாந்த் . பின்னர் அப்படியே மார்க்கெட் இறங்கி பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார் பிரசாந்த் .
இதையடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் பிரசாந்த் . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது…