April 22, 2024

திரிஷாவிடம் மன்னிப்பு கேட்கலைனா கம்பி தான் எண்ணனும் ..!! அதிரடி உத்தரவு போட்ட மகளிர் ஆணையம் ..!! 61 வயதில் இதெல்லாம் தேவையா மன்சூர் ..!!

மன்சூர் அலிகான் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த மன்சூர் அலிகான் தற்போது காமெடியனாகவும் கலக்கி கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் எப்போதும் தன்னுடைய மனதில் பட்டதை அப்படியே சொல்லும் மன்சூர் அலிகான் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரிஷாவை பற்றி தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்திருந்தார் நடிகர் மன்சூர் அலிகான் . அப்படி லியோ படத்தில் திரிஷாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன்.  அதோடு திரிஷாவை,

கட்டிலில் போடலாம் என்றும் இருந்தேன் ஆனால் அது நடக்கவில்லை என்று மிகவும் கீழ்த்தரமாக பேசியிருந்தார் மன்சூர் அலிகான் . இதற்கு திரிஷா மிகப்பெரிய கண்டனத்தை தெரிவித்து இருந்தார் . அது மட்டுமல்லாமல் தற்போது பல நடிகைகள் மற்றும் இயக்குனர்கள்,

திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் . ஆனால் இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்தும் கூட திரிஷாவிடம் மன்சூர் அலிகான் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை . இதனால் தற்போது தேசிய மகளிர் ஆணையம் இவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளார்களாம் . அந்த வகையில்,

ஐபிசி பிரிவு 509 பியின்  படி மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளதாம்  தேசிய மகளிர் ஆணையம்.  இதனால் மன்சூர் அலிகான் கைது செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *