ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வந்தவர் வைகைப்புயல் வடிவேலு . அதுவும் அப்போது இவர் இல்லாத படங்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார் வடிவேலு. ஆனால் இப்படி ரசிகர்களின் ,
பேவரைட் காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலுவுக்கு கொஞ்சம் ஆணவமும் , திமிரு அதிகம் என்று தான் சொல்ல வேண்டும் . காரணம் ஆரம்ப காலகட்டங்களில் இவரை தூக்கி விட்டவர்களை எல்லாம் சுத்தமாக மறந்து விட்டார் வடிவேலு . அதுமட்டுமல்லாமல் கேப்டன் இறந்தபோது கூட ,
அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை . இதனால் வடிவேலு மீது பிரபலங்களும் , ரசிகர்களும் மிகப்பெரிய கோபத்தில் இருந்த வருகின்றனர். மேலும் கேப்டன் விஜயகாந்தின் இறப்பிற்கு வராத வடிவேலு சமீபத்தில் நடந்த கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .
ஆனால் அங்கும் அசிங்கப்பட்டு இருக்கிறார் . அதாவது மேடையில் பேசிவிட்டு கிளம்பிய வடிவேலுவுக்காக பேட்டரி கார் தயாராக இருந்ததாம். ஆனால் அவர் வருவதற்குள் ட்ரம்ஸ் சிவமணி தன்னுடைய குடும்பத்துடன் அந்த காரில் ஏறிக்கொண்டாராம். அதற்கு பக்கத்தில் இருந்தவர்கள் இது வடிவேலுவுக்காக,
ஏற்பாடு செய்யப்பட்ட கார் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் ட்ரம்ஸ் சிவமணி இவன் எல்லாம் ஒரு ஆளு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம் . இப்படி 63 வயதாகியும் கூட வடிவேலு தன்னுடைய குணத்தை மாற்றி கொள்ளாததால் தான் இப்படி அசிங்கப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது …