சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிவகார்த்திகேயன் மெரினா என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார் . இதன்பிறகு இவர் நடித்த மனம் கொத்தி பறவை ,எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்கள் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது .
இதன் பிறகுதான் ரசிகர்களின் பேவரைட் நடிகராக மாறினார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் அண்மைக்காலமாக இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது . இதை அடுத்து தற்போது இன்று நேற்று நாளை படத்தின் ,
இயக்குனரான ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத்தி சிங் ,ஈஷா கோபிகர் ,யோகி பாபு ,கருணாகரன் ,பால சரவணன் போன்ற பல பிரபலங்கள்,
நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் . இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம்,
உங்களுடைய க்ரஷ் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் . அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் , க்ரஷ் என்று யாரும் கிடையாது. ஆனால் பேவரைட் நடிகைனா அது ஆல்யா பட் தான் என்று கூறியிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்…