கடந்த வாரம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் . இவருடைய திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது . மேலும் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கூட்டம் கூட்டமாக குவிந்தார்கள் . குறிப்பாக வாழும்போதே வள்ளலாக இருந்து வந்ததால் விஜயகாந்தின் இறப்பில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
அதோடு அவர் இறந்து பிறகு அவரைப்பற்றி வரும் தகவல்கள் எல்லாம் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி வருகிறது . இதனால் அவர் மறைந்தாலும் அவர் புகழ் மறையாது என்று பலரும் கூறிவருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் இறப்பதற்கு முன்பே,
செத்தா இப்படி சாகணும் என்று கூறியிருக்கிறார் விஜயகாந்த். அந்த வகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான விஜயகாந்த் எம்ஜிஆர் மறைவு செய்தியை கேட்டு மிகவும் வேதனையில் இருந்தாராம் . அப்போது அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு,
வீடு திரும்பும் போது எம்ஜிஆரின் உடலை பார்க்க ஏராளமான மக்கள் ஓடுவதை பார்த்திருக்கிறார். பின்னர் பக்கத்தில் இருந்த தயாரிப்பாளர் சிவாவிடம் செத்தா இப்படி சாகணும்யா என்று கூறினாராம். அன்று விஜயகாந்த் எதற்காக இப்படி கூறினார் என்று தெரியவில்லை.
இருந்தாலும் கேப்டன் விஜயகாந்தின் இறப்பில் எம்.ஜி.ஆருக்கு வந்த கூட்டத்தை விட மூன்று மடங்கு அதிகம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது…