பூர்ணிமா ரவி ஆரம்ப காலகட்டங்களில் யூடியூப் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் . குறிப்பாக அராத்தி என்ற பெயரில் பெரிய அளவில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும் . இதன் பிறகு தமிழில் வெளியான பிளான் பண்ணி பண்ணனும் ,சோட்டா, அன்னபூரணி போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் பூர்ணிமா ரவி .
இதை அடுத்து தற்போது கதாநாயகியாக செவப்பி என்ற படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார் பூர்ணிமா . இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டார் பூர்ணிமா . மேலும் இவர் ஆரம்பத்திலிருந்து பிக்பாஸ் வீட்டில் என்னென்ன வேலத்தனங்களை .
செய்தார் என்பது எல்லா ரசிகர்களுக்கும் தெரிந்த ஒன்றுதான் . இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த சில நாட்களிலேயே ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார் பூர்ணிமா. இதை அடுத்து 96வது நாளில் 16 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிவிட்டார் பூர்ணிமா. மேலும் இவருடைய முடிவு,
புத்திசாலித்தனமான முடிவு என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பூர்ணிமாவுக்கு ராஜ மரியாதையே கொடுத்துள்ளனர் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் . அந்தப் புகைப்படங்கள் தற்போது ,
இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் இவர் என்ன ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கமா வாங்கிட்டு வந்து இருக்காரு , இவ்வளவு அலப்பறை பண்றீங்க என்று கூறி வருகின்றனர்…