தமிழ் சினிமா உலகில் ஒரு சிறந்த காமெடி நடிகராக இருந்து வந்தவர் வைகை புயல் வடிவேலு அவர்கள் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் . இதன் பிறகு இவர் இல்லாத படங்களே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு பல திரைப்படங்களில் நடித்து வந்தார் வடிவேலு.
இப்படி உச்சத்தில் இருந்து வந்த வடிவேலு கேப்டன் விஜயகாந்த் அவர்களை தேவையில்லாமல் பேசி சர்ச்சையில் சிக்கியது மட்டுமல்லாமல் பல வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். அதோடு கேப்டன் விஜயகாந்தின் மரணத்திற்கு வரவில்லை என்று,
வடிவேலுவை நடிகர்கள் முதல் ரசிகர்கள் வரை பல பேர் கண்டபடி திட்டி வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் வடிவேலுவை திட்டுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது இந்த ஒரு நடிகரை தவிர என்று கூறியுள்ளார் காமெடி நடிகர் ஜெயமணி . அந்த வகையில் அவர் கூறியதாவது ,
வடிவேலுவை திட்டுகிற உரிமை தமிழ் சினிமாவிலேயே ஒரே ஒரு நடிகருக்கு மட்டும் தான் இருக்கிறது. அது ராஜ்கிரனுக்கு மட்டும்தான். வேற எந்த நடிகருக்கும் உரிமை கிடையாது. மேலும் வடிவேலுவுக்கு இப்போது மார்க்கெட் இல்லாமல் இருப்பதால்தான் பலரும் அவரை,
பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவருக்கு மார்க்கெட் இருந்திருந்தால் இப்படி யாரும் பேசியிருக்க மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார் நடிகர் ஜெயமணி . இதை பார்த்த ரசிகர்கள் இவர் என்ன வடிவேலுக்கு ஜால்ரா போடுகிறார் என்று கூறி வருகின்றனர்…