கயல் ஆனந்தி ஓர் பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய கயல் ஆனந்தி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கயல் படத்தின் மூலம் தான் .
இந்த படத்திற்குப் பிறகு தான் கயல் ஆனந்தி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சண்டிவீரன், விசாரணை, கடவுள் இருக்கான் குமாரு, பண்டிகை ,மன்னர் வகையறா ,பரியேறும் பெருமாள் ,இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு , நதி
போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை கயல் ஆனந்தி. மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே உதவி இயக்குனரான சாக்ரடீஸ் என்பவரை திருமணம் ,
செய்து கொண்டார் கயல் ஆனந்தி. திருமணமான இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் எப்போதும் அடக்க ஒடுக்கமான புகைப்படங்களை பதிவிட்டு வரும் கயல் ஆனந்தி தற்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் .
இதை பார்த்த ரசிகர்கள் நல்லாத்தான இருந்தீங்க இப்ப என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ வந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…