சுதா கொங்கரா ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சுதா கொங்கரா கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான துரோகி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இருந்தாலும் இதன் பிறகு இவருடைய இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படம் தான்,
இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து குரு ,புத்தம் புது காலை, சூரரைப்போற்று , பாவக்கதைகள் போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார் சுதா கொங்கரா. மேலும் இவருக்கு முதல் முதலில் அங்கீகாரம் கொடுத்த இறுதிச்சுற்று திரைப்படத்தின்,
கதையே இவருடையது கிடையாதாம் . அந்த வகையில் துளசி சரஸ்வதி என்ற இரண்டு உண்மையான வீராங்கனையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தான் இறுதிச்சுற்று படத்தின் கதை . ஆனால் அந்த வீராங்கனையிடம் கதையை மட்டும் கேட்டுவிட்டு புகழை எல்லாம் ,
சுதா கொங்கரா வாங்கி இருக்கிறார் . இன்னும் சொல்லப்போனால் அந்த வீராங்கனையின் பெயரைக் கூட அந்தப் படத்தில் போடவில்லையாம் . இது குறித்து கேட்டதுக்கு நாங்கள் பல பேரிடம் கதை கேட்டோம் என்றும், எங்களுக்கு கமிஷனர் தெரியும் என்றெல்லாம் அந்த வீராங்கனையை,
மிரட்டி இருக்கிறார் சுதா கொங்கரா. தற்போது அந்த வீராங்கனை பேசிய வீடியோ பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அப்ப ஞானவேல்ராஜா இப்ப இவரா சூர்யா கூட இருக்கும் எல்லோரும் இப்படித்தான் போல என்று கூறி வருகின்றனர் …
View this post on Instagram