கடந்த 1990 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் என் உயிர் தோழன் . இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் பாபு . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன்னுடைய நடிப்பால் கவர்ந்து விட்டார் நடிகர் பாபு . இதன் பிறகு கிட்டத்தட்ட 14 படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு ஒப்பந்தமானார் பாபு .
அந்த வகையில் தாயம்மா ,பொண்ணுக்கு சேதி வந்தாச்சு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் பாபு . இப்படி சினிமாவுக்கு வந்த நேரம் வாய்ப்புகள் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டினாலும் இவருடைய கெட்ட நேரம் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது,
மாடியில் இருந்து குதித்தலில் முதுகில் பலமாக அடிபட்டு இருக்கிறது . அதன் பிறகு இவர் பிழைத்ததே பெரிய விஷயமாக இருந்ததாம் . ஆனால் இந்த சிகிச்சைக்குப் பிறகு நடிகர் பாபுவால் நடக்கக்கூட முடியவில்லை யாம் . கிட்டத்தட்ட 30 வருடமாக படிக்கையில் இருந்தபடியே,
சிகிச்சை பெற்று வந்திருக்கிறார் நடிகர் பாபு . சமீபத்தில் கூட இயக்குனர் பாரதிராஜா நடிகர் பாபுவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வந்தார். இப்படி இருக்கும் நிலையில் நேற்று பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டாராம் நடிகர் பாபு . இந்நிலையில் தன்னுடைய படத்தின்,
கதாநாயகன் இறந்தது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகர் பாபுவின் இறப்பிற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர் …
திரைத்துறையில்
மிகப்பெரும் நட்சத்திரமாக
வந்திருக்கவேண்டியவன்
படப்பிடிப்பில் நடந்த விபத்தில்
30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன்
வாழ்ந்து மறைந்த
” என் உயிர் தோழன் பாபு ” வின்
மறைவு மிகுந்த மனவேதனை
அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/ANwRUthJbd— Bharathiraja (@offBharathiraja) September 19, 2023