இந்த வருடம் ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 7 ல் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் . இதில் எப்போதும் போல சர்ச்சையான போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். அப்படி பிக் பாஸ் வீட்டில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய போட்டியாளர்கள் ஒருவர்கள் தான் நிக்சன் . ஜோவிகா. வனிதாவின் மகளான ஜோவிகா ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய சர்ச்சையான பேச்சால் ,
ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார் . அது மட்டுமல்லாமல் அவர் படிப்பே தேவையில்லை என்று சொன்ன போதெல்லாம் ரசிகர்கள் கொந்தளித்தார்கள். இதன்பிறகு அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் . இவரை தொடர்ந்து நிக்ஸன். ஒவ்வொரு சீசனிலும்,
பெண்களிடம் சில்மிஷம் செய்வதற்கென்றே ஒரு போட்டியாளர் வருவார் . இந்த சீசனில் நிக்சன் என்று தான் சொல்ல வேண்டும் . இவர் ஐஸுடன் அடித்த லூட்டியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இவரை தொடர்ந்து சரவண விக்ரம். ஆரம்பத்தில் இருந்தே பிக் பாஸ் டைட்டில் வின்னர்,
நான் தான் என்று சுற்றிக் கொண்டிருந்தார். ஆனால் கடைசியில் அவரை எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றி விட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் சரவண விக்ரம், நிக்ஸன், ஜோவிகா ஒன்றாக சந்தித்துள்ளனர் .
அந்த புகைப்படங்களையும் தற்போது வெளியிட்டுள்ளனர். இதை பார்த்தால் காக்க காக்க படத்தில் வரும்” நாங்க மூணு பேரு எங்களுக்கு பயமே கிடையாது ” என்ற வசனத்திற்கேற்ப இருக்கிறது என்று கூறப்படுகிறது…