தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஆனந்தி. ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் கலக்கி கொண்டு வந்த ஆனந்தி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். இருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கயல் படத்தின் மூலம் தான். இந்த படத்திற்கு பிறகு தான்,
கயல் ஆனந்தி என்று அழைக்கப்பட்டு வருகிறார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சண்டிவீரன் ,திரிஷா இல்லைனா நயன்தாரா, விசாரணை ,கடவுள் இருக்கான் குமாரு, பண்டிகை ,மன்னர் வகையறா ,பரியேறும் பெருமாள் ,இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ,
போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை கயல் ஆனந்தி. மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போது துணை இயக்குனரான ,
சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை கயல் ஆனந்தி . திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் தற்போது மங்கை என்ற படத்தில் நடிக்க உள்ளாராம் நடிகை கயல் ஆனந்தி . தற்போது அந்த படத்தின் போஸ்டர் வெளியாகி,
ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது . மேலும் என்னதான் இவருடைய தைரியத்தை பலரும் பாராட்டினாலும் கயல் ஆனந்தியை இப்படி பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு மனசு வரவில்லை . இதோ அந்தப்படத்தின் போஸ்டரை நீங்களும் பாருங்க…