தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் கலக்கிக் கொண்டு வரும் நயன்தாரா கடந்த வருடம் தான் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணமான பிறகும் பல படங்களில் நடித்து வரும் நயன்தாரா தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான,
ஜவான் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் . குறிப்பாக கவர்ச்சியே காட்டாமல் நடித்து வந்த நயன்தாரா இந்த படத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்திருக்கிறார் . இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் போதே அந்த விஷயத்துக்கு தனி சம்பளம் வேண்டும் என்று கண்டிஷன் போட்டு தான் நடித்தாராம் .
அந்த வகையில் பொதுவாகவே எந்த ஒரு படத்தின் பிரமோஷனுக்கும் கலந்து கொள்ளாத நயன்தாரா தற்போது திடீரென இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தொடங்கினார் . அப்படி தொடங்கிய உடனே ஜவான் படத்தின் டிரைலரை வெளியிட்டு இருந்தார் நயன்தாரா. ஆனால் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் ,
உருவான இறைவன் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் நயன்தாரா . ஆனால் இந்தப் படத்தின் போஸ்டரை கூட நயன்தாரா வெளியிடவில்லை . இதற்கு காரணம் ஜவான் படத்தின் டிரைலரை வெளியிடுவதற்காக சம்பளம் இல்லாமல் ஒரு தொகையை கேட்டாராம் நயன்தாரா .
அதை அவர்கள் கொடுத்ததால் ட்ரைலரை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டாராம் . ஆனால் இறைவன் பட குழுவினர் எதுவும் தாராததால் நயன்தாரா அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லையாம் .இதை பார்த்த ரசிகர்கள் கல்யாணத்திற்கு பிறகு இப்படி மாறிவிட்டாரா என்று கூறி வருகின்றனர்…