கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு முதலமைச்சர் ஆகும் எல்லா தகுதிகளும் இருந்தும் அவரால் அந்த இடத்தை அடைய முடியவில்லை என்பதுதான் பலருக்கும் வருத்தமாக இருக்கிறது. இதற்குக் காரணம் அவரை சுற்றி இருந்த துரோகிகளும் , மக்களும் தான். மேலும் தன்னுடைய மனதில் பட்டதை அப்படியே பேசிய விஜயகாந்தை ஒரு கட்டத்தில் மீடியாக்கள் கோமாளியாக மாற்றினார்கள் .
இதனால் அவருடைய பெயர் அப்படியே கீழே சரிந்தது . இதன்பிறகு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . இதனால் இவரால் அரசியிலில் எதையும் செய்ய முடியவில்லை . இப்படி இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் ,
இறந்துவிட்டார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . ஆனால் அவர் இறந்த பிறகு விஜயகாந்த் அவர்கள் முதல்வராக வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகின்றனர் முட்டாள் மக்கள் . இப்படி இருக்கும் நிலையில் அரசியல் ஆசை யாரை விட்டது என்று சொல்வது போல,
கேப்டன் இறந்து இன்னும் ஒரு நாள் கூட ஆகாத நிலையில் அதற்குள் புதிய சபதம் எடுத்திருக்கிறார் பிரேமலதா . அதாவது வருகின்ற தேர்தலில் கண்டிப்பாக தேமுதிக ஜெயிக்க வேண்டும் என்று தொண்டர்கள் முன்னால் நின்று சபதம் எடுத்திருக்கிறார் பிரேமலதா .
என்னதான் இவர் கேப்டனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இப்படி தொண்டர்கள் முன்பு கூறினாலும் ஒரு சிலர் பிரேமலதா அனுதாப ஓட்டு தேடுகிறார் என்றும் கூறி வருகின்றனர்…