தற்போது தமிழ் சினிமா உலகில் மிகவும் பிஸியான நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு ஒரு கட்டத்தில் அறிமுகம் இயக்குனர்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தனர் . அந்த வகையில் நாளைய இயக்குனர் மூலம் பிரபலமான இயக்குனர் நலன் குமாரசாமி விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தார்.
அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு இவர்களுடைய கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் சூது கவ்வும். சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . பின்னர் இவர்களுடைய கூட்டணியில் வெளியான காதலும் கடந்து போகும் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது .
இப்படி இருக்கும் நிலையில் 10 வருடங்கள் கழித்து சூது கவ்வும் படத்தில் நடித்த பாபி சிம்ஹா ,ரமேஷ் திலக் ,கருணாகரன்,அசோக் செல்வன் போன்ற நடிகர்களை விஜய் சேதுபதி படத்தில் இணைக்க உள்ளாராம் நலன் குமாரசாமி . இதனால் இந்த படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது…