April 24, 2024

சின்ன பிரச்சனையை ஊதி பெரிசாக்கிய வடிவேலு ..!! காரணத்தை கேட்டு காரி துப்பும் ரசிகர்கள் ..!! கேப்டனுடன் பகை வளர இது தான் காரணமா ..??

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கேப்டன் விஜயகாந்த் அவர்களால் வளர்ச்சி அடைந்தவர்கள் ஏராளம் உண்டு.  அந்த வகையில் பல பேரை கூறலாம்.  அந்த வரிசையில் ஒருவர் தான் காமெடி நடிகர் வடிவேலு . அப்படி சின்ன கவுண்டர் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் வடிவேலு . ஆனால் இயக்குனர் அவருக்கு குறைவான காட்சி தான் உள்ளதாக கூறியிருக்கிறார் . இதன் பிறகு கேப்டன் அவன் நம்ம ஊரு பையன்,

படம் முழுக்க வர மாதிரி பாருங்க என்று கூறி இருக்கிறார் . அப்படி ஆரம்பக் காலகட்டங்களில் வடிவேலுவை வளர்த்து விட்டிருந்த விஜயகாந்தை  ஒரு கட்டத்தில் மிகவும் கீழ்த்தரமாக பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார் வடிவேலு . குறிப்பாக இவர்கள் இருவருக்கும் இடையே பகை ஏற்படுவதற்கு காரணமே ,

அந்த ஒரு சம்பவம் தானாம். அதாவது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வக்கீல் இறந்து விட்டாராம் . அவருடைய வீடு வடிவேலுவின் வீட்டிற்கு எதிரில் தான் உள்ளதாம் . அப்போது இறப்பு வீட்டிற்கு வந்தவர்கள் வடிவேலுவின் வீட்டின் முன்பு வாகனங்களை நிறுத்தி இருக்கிறார்கள் .இதனால் கடுப்பான வடிவேலு,

இங்கெல்லாம் நிறுத்தக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.  இதன் பிறகு தான் இந்தப் பிரச்சனை பூகம்பம் போல வெடித்தது . அது மட்டுமல்லாமல் அப்போது விஜயகாந்த் அரசியலில் களமிறங்கி இருந்தார் . அந்த நேரத்தில் திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று சொல்லி விஜயகாந்தை மிகவும் ,

கீழ்த்தரமாக பேசியிருந்தார் . ஆனால் இதன் பிறகு திமுக படுதோல்வியை சந்தித்ததால் வீட்டிலேயே முடங்கி கிடந்தார் வடிவேலு.  அப்போதுகூட வடிவேலு பிறவி கலைஞன் அவர் எல்லாம் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று பல தயாரிப்பாளர்களிடம் வடிவேலுவுக்கு வாய்ப்பு தரச் சொல்லி இருக்கிறார் கேப்டன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *