சிவகார்த்திகேயன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . இன்று இவர் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு காரணமாக பல பிரபலங்கள் உள்ளனர் . ஆனால் அவர்களை எல்லாம் சிவகார்த்திகேயன் பகைத்துக் கொண்டது தான் சோகமான விஷயமே. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்தி பறவை படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார் . பின்னர் இவர்களின் கூட்டணியில்,
வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், , நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல திரைப்படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது . இப்படி தன்னை ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் டி இமானுக்கு சிவகார்த்திகேயன் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு,
ஒரு துரோகத்தை செய்து விட்டாராம் . இதனால் இனிமேல் நான் சிவகார்த்திகேயனின் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று வெளிப்படையாக சொல்லிவிட்டாராம் டி இமான் . இதனால்தான் இவர்கள் இருவரும் நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு எந்த ஒரு படங்களிலும் கூட்டணி அமைக்கவில்லை என்று கூறப்படுகிறது …