ஒரு காலகட்டத்தில் பெண் ரசிகைகளின் கனவு கண்ணனாக வலம் வந்தவர் தான் நடிகர் அரவிந்த்சாமி . கடந்த 1991 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான தளபதி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் அரவிந்த்சாமி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார் அரவிந்த்சாமி .
இதன் பிறகு இந்த படத்தை தொடர்ந்து மறுபடியும், தாலாட்டு ,பாசமலர்கள், பாம்பே ,இந்திரா, மின்சார கனவு ,என் சுவாச காற்றே போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் அரவிந்த் சாமி. மேலும் அப்போது இருந்த பல பெண்கள் அரவிந்த்சாமி ,
மாதிரி கணவர் வரவேண்டும் என்று கூறி வந்தனர் . இப்படி தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு வந்த அரவிந்த்சாமி நீண்ட இடைவெளிக்கு பிறகு கடல் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் . இதை தொடர்ந்து தற்போது வில்லனாகவும், ஹீரோவாகவும் ,
கலக்கிக்கொண்டு வருகிறார் நடிகர் அரவிந்த்சாமி. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அரவிந்த்சாமியின் தந்தை குறித்த தகவல் வெளியாகி உள்ளது . அவர் தான் சினிமா நடிகரும், சீரியல் நடிகருமான டெல்லி குமார் . தமிழில் வெளியான டும் டும் டும் ,கன்னத்தில் முத்தமிட்டால் ,
சாமுராய், சிங்கம் ,எந்திரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்த டெல்லி குமார் ஒரு சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார் . மேலும் இவருடைய மகன் தான் நடிகர் அரவிந்த் சாமியாம். பின்னர் இவருடைய உறவினர் ஒருவருக்கு அரவிந்த் சாமியை தத்து க்கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது…