கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கொஞ்சம் கூட சுயநலமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி தன்னை கேவலப்படுத்தியவர்களும் வாழவேண்டும் என்று தான் நினைத்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . அப்படி தான் வடிவேலுவும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்திருக்கிறார் . அந்த வகையில் விஜயகாந்தும் ,வடிவேலுவும் இணைந்து சின்ன கவுண்டர் ,
தவசி ,எங்கள் அண்ணா ,வல்லரசு, நரசிம்மா ,ராஜ்ஜியம் போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . இன்னும் சொல்லப்போனால் வடிவேலுவுக்கு பல திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த் அவர்கள் தான். ஆனால் ஒரு கட்டத்தில் நன்றியை மறந்த,
வடிவேலு விஜயகாந்த் அரசியலுக்கு வரப் போகிறார் என்பதை தெரிந்ததும் திமுகவுக்கு ஆதரவு கொடுத்து வந்தார் . அப்போது திமுக மேடையில் விஜயகாந்தை மிகவும் தரை குறைவாக பேசியிருந்தார் வடிவேலு . இதனால் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
இதனால் பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார் வடிவேலு . இப்படி தன்னுடைய முதுகில் குத்திய வடிவேலுவை பழிவாங்காமல் அவர் ஒரு பிறவி கலைஞர், அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று பல தயாரிப்பாளர்களிடம் போன் போட்டு சிபாரிசு ,
செய்து இருக்கிறார் விஜயகாந்த் . இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதைப் பார்த்த ரசிகர்கள் வடிவேலு கோவில் கோவிலாக போனாலும் பாவம் கழியாது என்று கூறி வருகின்றனர்…