April 26, 2024

கோவில் கோவிலாக போனாலும் பாவம் கழியாது ..!! ரொம்ப கேவலமாக பேசிய வடிவேலு ..!! பதிலுக்கு கேப்டன் என்ன செய்தார் தெரியுமா ..??

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கொஞ்சம் கூட சுயநலமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி தன்னை கேவலப்படுத்தியவர்களும்  வாழவேண்டும் என்று தான் நினைத்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . அப்படி தான் வடிவேலுவும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்திருக்கிறார் . அந்த வகையில் விஜயகாந்தும் ,வடிவேலுவும் இணைந்து சின்ன கவுண்டர் ,

தவசி ,எங்கள் அண்ணா ,வல்லரசு, நரசிம்மா ,ராஜ்ஜியம் போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . இன்னும் சொல்லப்போனால் வடிவேலுவுக்கு பல திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த் அவர்கள் தான்.  ஆனால் ஒரு கட்டத்தில் நன்றியை மறந்த,

வடிவேலு விஜயகாந்த் அரசியலுக்கு வரப் போகிறார் என்பதை தெரிந்ததும் திமுகவுக்கு ஆதரவு கொடுத்து வந்தார் . அப்போது திமுக மேடையில் விஜயகாந்தை மிகவும் தரை குறைவாக பேசியிருந்தார் வடிவேலு . இதனால் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

இதனால் பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார் வடிவேலு . இப்படி தன்னுடைய முதுகில் குத்திய வடிவேலுவை பழிவாங்காமல் அவர் ஒரு பிறவி கலைஞர், அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று பல தயாரிப்பாளர்களிடம் போன் போட்டு சிபாரிசு ,

செய்து இருக்கிறார் விஜயகாந்த் . இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதைப் பார்த்த ரசிகர்கள் வடிவேலு கோவில் கோவிலாக போனாலும் பாவம் கழியாது என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *