தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி . ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத ஹீரோவாக கலக்கிக்கொண்டு வந்தார் . இதன் பிறகு வில்லனாக நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் குவிந்தது என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி ரஜினி ,கமல் ,ஷாருக்கான் ,விஜய் போன்ற,
பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக நடிக்க போவதில்லை என்று முடிவெடுத்து விட்டாராம். அதற்கு காரணம் இவர் தொடர்ந்து வில்லனாக நடித்து வருவதால் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களின் வியாபாரம் ,
பெரிய அளவில் பாதிக்கிரதாம் . அது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்துக்கு மேல் வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தையே விஜய் சேதுபதிக்கு கொடுக்கிறார்களாம். இதனால் இனிமேல் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று முடிவெடுத்து இருக்கிறாராம் விஜய் சேதுபதி…