கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எல்லா தலைவருக்கும் நன்றாக மதிப்பு கொடுப்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். குறிப்பாக கேப்டன் விஜயகாந்தின் திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுத்ததே கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் . இதன் பிறகு அரசியலில் களம் இறங்கிய விஜயகாந்த் மோடி மீது அவ்வளவு பிரியமாக இருந்து வந்தார் . இன்னும் சொல்லப்போனால்,
தன்னுடைய மூத்த மகனான விஜய பிரபாகரனின் திருமணத்தை மோடி தலைமையில் தான் நடத்த வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . மேலும் விஜயகாந்தின் மகனுக்கு நிச்சயதார்த்தம் கூட முடிந்து விட்டது.
ஆனால் அப்போது மோடியால் வரமுடியவில்லையாம் . அதோடு அந்த நேரத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் தான் இப்போது வரை அவருடைய மூத்த மகனுக்கு திருமணம் நடக்காமல் இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது.
இப்படி இருக்கும் நிலையில் பிரதமர் மோடியும் , கேப்டன் விஜயகாந்த் அவர்களும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …