தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல நடிகராகவும் , நல்ல மனிதராகவும் இருந்து வருபவர் விஜய் ஆண்டனி. இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளன ர் . இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் . இவருடைய மகளின் திடீர் இறப்பு சினிமா பிரபலங்கள் உட்பட ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் விஜய் ஆண்டனி போன்ற ஒரு நல்ல அப்பா இருக்கும்போது எப்படி அவருடைய மகள் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர் . குறிப்பாக இப்போது வரை அவருடைய மகளின் மரணத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இப்படி இருக்கும் நிலையில்,
விஜய் ஆண்டனியின் மகளை காவு வாங்கியதே அவருடைய படங்கள் தான் என்று புதிய குண்டை தூக்கிப் போட்டு இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன் . அந்த வகையில் தொடர்ந்து வித்தியாசமான டைட்டில்களை தன்னுடைய படத்தின் பயன்படுத்தி வரும் விஜய் ஆண்டனி சைத்தான்,
எமன் ,கொலைகாரன் ,கொலை , ரத்தம் போன்ற நெகட்டிவ் டைட்டில் வைத்த படங்களில் நடித்திருந்தார். ஆனால் இது அவருடைய வாழ்க்கையிலும் பாதித்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தான் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இருந்தார் நடிகர் விஜய் ஆண்டனி.
இதைத்தொடர்ந்து தற்போது அவருடைய மகளும் இறந்து விட்டார் என்று கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன். இதை பார்த்த ரசிகர்கள் அவரே உடைந்து போய் கிடக்கிறார் , இப்படி இருக்கும்போது மனசாட்சியே இல்லாமல் இப்படி எல்லாம் பேசலாமா என்று கூறி வருகின்றனர்…