தமிழ் சினிமா உலகில் 80, 90 களில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வந்தவர் தான் நடிகர் மைக் மோகன். குறிப்பாக ரஜினி, கமல் காலத்திலேயே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது . அந்த அளவிற்கு முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டு வந்தார் மைக் மோகன். மேலும் மைக் மோகன் விஜயகாந்தும் நல்ல நண்பர்கள் ஆவார்கள் . ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய மைக் மோகன்,
20 வருடங்கள் கழித்து ஹரா என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் என்ற படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் மைக் மோகன் . இப்படி இருக்கும் நிலையில் மறைந்த,
நடிகரும், அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று இருந்தார் நடிகர் மைக் மோகன் . அப்படி அங்கு சென்றதும் கேப்டனுக்கு மலர் தூவி வணங்கிய பிறகு பொது மக்களுக்கும் , ரசிகர்களுக்கும் அன்னதானம் வழங்கி நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் மைக் மோகன் …