தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . இயக்குனரும் , நடிகருமான எஸ்ஏ சந்திரசேகரனின் ஒரே மகனான விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் ஹீரோவாக மூலம் அறிமுகமானார் . ஆனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது . இதன் பிறகு இவருடைய இரண்டாவது படத்தில் ஒரு முன்னணி நடிகர் நடித்தால்,
நன்றாக இருக்கும் என்று யோசித்து இருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர் . அப்போதுதான் விஜயகாந்திடம் கேட்டு இருக்கிறார் . அவரும் விஜய்க்காக மறுக்காமல் அந்த படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் . இதனால் அப்போதிலிருந்து இப்போது வரை ,
விஜய்யை தன்னுடைய தம்பி போலவே பார்த்து வந்திருக்கிறார் விஜயகாந்த். இப்படி இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் திடீரென இறந்து விட்டார் விஜயகாந்த் . அவருடைய மரண செய்தியை கேட்டு விரைந்து வந்த விஜய் கண்கலங்கியது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது கேப்டன் வழியில் இறங்கியுள்ளார் தளபதி . அந்த வகையில் சமீபத்தில் தென் மாவட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். தற்போது அந்த மக்களை நேரில் சென்று உதவிப் பொருட்களையும்,
ஊக்க தொகையையும் வழங்கி இருக்கிறார் விஜய் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …