கடந்த வாரம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 9 நாட்களில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஆனால் இதற்கு முன்பு நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களையே பெற்றது .
குறிப்பாக ரஜினிக்கு மட்டும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட்டு விஜய்க்கு மட்டும் இப்படி ஒரு மோசமான படத்தை நெல்சன் கொடுத்து விட்டாரே என்று விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர் . இந்நிலையில் பீஸ்ட் தோல்விக்கான காரணத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கலாநிதி மாறன் கூறியுள்ளார் .
அந்த வகையில் பீஸ்ட் படம் இத்தனை நாட்களுக்குள் எடுத்து முடிக்க வேண்டும் என்று நெல்சனுக்கு அதிக அழுத்தம் கொடுத்தார்களாம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். அதோடு அந்த நேரத்தில் கேஜிஎப் படமும் வெளியாகி இருந்தது. இதனால் பீஸ்ட் படத்தை வெளியிட வேண்டாம் என்று சன் பிக்சர்ஸிடம் பலரும் கூறியுள்ளார்கள்.
ஆனால் இவர்கள்தான் விடாப்பிடியாக வெளியிட்டே ஆக வேண்டும் என்று வெளியிட்டுள்ளனர் . அது மட்டுமல்லாமல் இயக்குனர் நெல்சனுக்கு ஓவர் நெருக்கடி கொடுத்ததால் அவரும் படத்தை சீக்கிரமாக எடுத்துக் கொடுத்து விட்டாராம் . இதனால்தான் இந்த படம் தோல்வி அடைந்ததாம் . இதற்கு முழுக்க முழுக்க காரணம் நாங்கள் தான் என்று,
கூறியிருந்தார் கலாநிதி மாறன் . ஆனால் நெல்சனுக்கு சில மாதங்கள் நேரம் கொடுத்திருந்தால் கண்டிப்பாக பீஸ்ட் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்து இல்லை என்றும் கூறப்படுகிறது …