தமிழ் சினிமா உலகில் இருக்கும் கண்ணியமான நடிகர்களில் கேப்டன் விஜயகாந்த் அவர்களும் ஒருவராவார் . மேலும் ஆரம்பத்தில் இருந்தே மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் கதைக்களங்களை தான் தேர்வு செய்து நடித்து வந்தார் விஜயகாந்த் . இன்னும் சொல்லப்போனால் 100 கோடி கொடுத்தாலும் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தாராம் விஜயகாந்த் .அதாவது அப்போது,
இருந்த பல முன்னணி நடிகர்கள் விளம்பரப் படங்களில் நடித்திருந்தனர் . ஆனால் விஜயகாந்த் விளம்பர படங்களில் நடிப்பதற்கு விரும்பவில்லை. அதோடு எந்தப் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே மாட்டேன் என்று உறுதியாக இருந்திருக்கிறார் விஜயகாந்த் .இதைத் தொடர்ந்து,
பெண்களை தவறாக சித்தரிக்கும் படங்களிலும் நடிக்க மாட்டேன் என்று அதனுடைய கூறியிருக்கிறார் விஜயகாந்த். இதனால்தான் இவர் படங்களில் நடிக்காத போதும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது. மேலும் கேப்டன் விஜயகாந்த் நிறத்தில் தான் கருப்பு ,
மனதளவில் மிகவும் வெள்ளை மனசுக்காரர் என்று தான் சொல்ல வேண்டும் . அதோடு சினிமாவில் இருக்கும் நடிகர்களிலேயே அதிக சம்பளத்துக்கு ஆசைப்படாத ஒரே நடிகர் என்றால் அது விஜயகாந்த் அவர்கள் தான் . காரணம் அவருக்கு சம்பளத்தை விட அந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் ,
லாபத்தை எடுக்க வேண்டும் என்பதில்தான் உறுதியாக இருப்பாராம் . அப்படி அதையும் மீறி படம் ஓடவில்லை என்றாலும் சம்பளத்தை திருப்பிக் கொடுத்து விடுவாராம் .இப்படி ஒரு நல்ல குணம் படைத்த மனிதர் திடீரென இறந்ததால் தான் ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் இருந்து வருகிறது…