கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முருகன் , தொடரி ,ரெமோ ,பைரவா, தானா சேர்ந்த கூட்டம் ,
சீமராஜா ,சண்டக்கோழி 2, சர்கார் , அண்ணாத்த போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ் . மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள,
மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். இதை அடுத்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில்,
கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷிடம் இரவு 10 மணிக்கு மேல் யாருடன் அதிகமாக பேசுவீர்கள் என்று கேட்டுள்ளனர் . அதற்கு பதில் அளித்த நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது , நான் இரவு 10 மணிக்கு மேல் யார் போன் பண்ணினாலும் எடுக்க மாட்டேன். ஆனால் நடிகர் உதயநிதி,
சாருடன் இரவு நேரங்களில் பேசுவேன் . இவரை தொடர்ந்து தெலுங்கு நடிகரான நானியுடனும் அடிக்கடி பேசுவேன் என்று கூறி யிருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் . இதைப் பார்த்த ரசிகர்கள் இது என்ன புது கதையா இருக்கு என்று கூறி வருகின்றனர்…