May 4, 2024

பிரதீப்பை செருப்பாலயே அடிச்சிருக்க வேண்டாமா ..?? அவன் வெளியில் வந்தது தான் நல்லது..!! கிழி கிழின்னு கிழித்த ” வத்திக்குச்சி ” வனிதா ..!!

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியதில் இருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியதற்கு பலரும் கொந்தளித்தார்கள்.  குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி தான் பிரதிப்பை வெளியே அனுப்பியதாக கமலே கூறி இருந்தார் . இதுதான் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

என்னதான் பிரதீப் செய்த விஷயங்கள் சக போட்டியாளர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தாலும்,  பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி பிரதிப்பை வெளியேற்றியது ரசிகர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.  இப்படி இருக்கும் நிலையில் பேட்டி ஒன்றில் ,

கலந்து கொண்ட வனிதா பிரதீப் கூறியதாவது , பிரதீப்புக்கு வாழ்க்கையில் நடந்த ஒரு மோசமான சம்பவம் தான் இவரை மன ரீதியாக பாதிக்கப்படுத்தி இருக்கிறது . மேலும் பிரதீப் அவருடைய அம்மாவையே பொது நிகழ்ச்சியில் தவறாக பேசியிருக்கிறான்.  நிச்சயமாக அவன்,

மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறான் என்றும் , அன்று கதவை திறந்து வைத்து பாத்ரூம் சென்ற பிரதீப் நாளை பெண்கள் முன்பு நிர்வாணமாக கூட நிற்பான் என்று வறுத்தெடுத்து இருந்தார் நடிகை வனிதா . அது மட்டுமல்லாமல் விசித்ராவிடம் பிரதீப் லவ் பண்ணலாம்,

என்று சொல்லியபோது விசித்ரா அவரை செருப்பாலயே அடித்திருக்க வேண்டாமா ,அவன் வெளியில் வந்தது தான் நல்லது என்று கடுமையாக பேசியிருந்தார் நடிகை வனிதா. தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *