சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார். கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வரும் ரஜினிகாந்த் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அப்படி அண்மையில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமில்லாமல்,
600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதை அடுத்து தற்போது ஜெய் பீம் பட இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் ரஜினிகாந்த் . இப்படி இருக்கும் நிலையில்,
கடந்த வாரம் தென் மாவட்டங்களில் மழை பெய்து மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருந்தார்கள் . இன்னும் சொல்லப் போனால் சென்னையைப் போலவே தென் மாவட்ட பகுதியும் வெள்ளத்தில் மிதந்தது. இதனால் அன்றாட தேவைக்கே வழியில்லாமல் பலரும் கஷ்டப்பட்டனர் .
இப்படி இருக்கும் நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு அவசர அவசரமாக வந்ததாக தகவல் வெளியானது . இதைப் பார்த்த பலரும் கண்டிப்பாக தூத்துக்குடி மக்களை பார்ப்பதற்காக தான் வருகிறார் என்று நினைத்திருந்தனர் . ஆனால் அவர் அதற்காக,
வரவில்லையாம். தூத்துக்குடியில் வேட்டையின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம் . அதற்காகத்தான் வந்தாராம். இதை பார்த்த ரசிகர்கள் மக்களை விட உங்களுக்கு படப்பிடிப்பு தான் ரொம்ப முக்கியமா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்…