தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்னவென்றால் கடைசி வரை துணை நடிகராக இருப்பது தான். மேலும் எல்லோருமே சினிமாவில் ஜெயிப்பதற்காகத்தான் உள்ளே வருகிறார்கள். ஆனால் அது சிலருக்கு மட்டும் தான் கை கொடுக்கிறது. அப்படி சினிமா ஆசையில் சினிமாவிற்குள் வந்தவர் தான் போண்டாமணி . கிட்டத்தட்ட 270 படங்களுக்கு மேல் நடித்தும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இப்படி இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் நடிகர் போண்டா மணி . இந்த தகவலை கேள்விப்பட்ட விஜயகாந்த் உடனடியாக போண்டாமணியின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க சொல்லி இருக்கிறார்.
அதை நடிகர் மீசை ராஜேந்திரன் போண்டாமணியின் மனைவி மற்றும் மகனிடம் கொடுத்திருக்கிறார். பெரிய நடிகர்கள் யாருமே கண்டுக்கொள்ளாத நிலையில் கேப்டன் செய்த இந்த சிறு உதவி போண்டாமணியின் குடும்பத்திற்கு ஆறுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது …