விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமான ஷோ தான் பிக் பாஸ். இதுவரை 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி தற்போது ஏழாவது சீசனில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் நான் மட்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் போனால்,
முதல் அடி அவளுக்குத்தான் என்று கூறியுள்ளார் பிக் பாஸ் வனிதா. அந்த வகையில் அவர் சொல்லிய போட்டியாளர் வேறு யாருமில்லை ரவீனா தான் . அப்படி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சென்றனர் . அப்போது ரவீனாவின் ஆன்ட்டி ரவீனாவை கண்டபடி திட்டி இருந்தார்.
மேலும் அவருடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் , அவர் வரவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து பேசிய வனிதா கூறியதாவது , ஒருவேளை நான் மட்டும் ரவீனாவின் அம்மாவாக இருந்திருந்தால் பிக் பாஸ் வீட்டிற்குள் போய் ஓங்கி அறைந்திருப்பேன் என்று கூறியிருந்தார்…