April 29, 2024

நெல் சனின் சி ரிப்பு க்கு பின் னால் இவ்வ ளவு சோ கமா ..?? பலரு க்கும் தெரி யாத அவரு டைய மறு ப்பக்க ம் ..!! இ து தெரியா ம இவ ரை தப்பா நினைச் சுட்டோ மே..!!

இயக்குனர் நெல்சன் மிகவும் நகைச்சுவையான மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . ஆனால் அவருடைய சிரிப்புக்கு பின்னால் மிகப்பெரிய சோகமே இருக்கிறது . அந்த வகையில் படித்து முடித்தவுடன் உதவி இயக்குனராக சேர்வதற்கு பல இயக்குனர்களின் வீட்டுக் கதவை தட்டி இருக்கிறார் நெல்சன்.  பின்னர் எந்த வாய்ப்பும் கிடைக்காததால் கடைசியில் விஜய் தொலைக்காட்சியில் உதவியாளராக சேர்ந்தார்.

பின்னர் ஒரே மாதத்தில் தன்னுடைய திறமையால் அடுத்த பதவிக்கு சென்றார் நெல்சன்.  அப்படி விஜய் தொலைக்காட்சியில் நடந்த பல சூப்பர் ஹிட் நகை நிகழ்ச்சிகளை நெல்சன் தான் இயக்கியிருந்தார் . அப்படி இவரின் திறமையை பார்த்து பிரமித்துப்போன சிம்பு இவருக்கு தன்னுடைய படத்தை இயக்கும்,

வாய்ப்பை கொடுத்துள்ளார் .அப்படி சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை தொடங்கிய நெல்சன் பாதி படத்தை எடுத்து முடித்து விட்டார் . பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை பாதியிலேயே இந்த திரைப்படம் நின்று விட்டது . இதன் பிறகு வெறுப்பின் உச்சகட்டத்திற்கு சென்ற நெல்சன் ,

மீண்டும் விஜய் டிவி கே வந்தார் .இதன் பிறகு நெல்சனின் திறமையை அறிந்த அனிருத் அவருக்காக ஒரு தயாரிப்பாளரை தயார் செய்துள்ளார் . அவர்தான் கோலமாவு கோகிலா படத்தை தயாரித்திருக்கிறார்.  இந்த படத்தின் மூலம் முத்திரையை பதித்த நெல்சன் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ,

டாக்டர் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் . ஆனால் அதன் பிறகு வெளியான பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது . இதனால் பல்வேறு இடங்களில் நெல்சனை அவமானப்படுத்தினார்கள் .இந்த விஷயம் ரசிகர்களையே சோகத்தில் ஆழ்த்தியது . அப்படி இருந்தும் கூட தன்னுடைய ,

விடாமுயற்சியை  விடாமல் இன்று சூப்பர் ஸ்டாரை  வைத்து ஜெயிலர் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் நெல்சன் . இந்தத் திரைப்படம் கண்டிப்பாக இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் என்று ரசிகர்களே மனதார கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *