ரச்சிதா மகாலட்சுமி ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார். ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் கலக்கிக்கொண்டு வந்த ரச்சிதா கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சரவணன் மீனாட்சி சீசன் 2 என்ற சீரியல் மூலம் தான்.
இந்த சீரியல் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும். இதன் பிறகு நாச்சியார்புரம் ,நாம் இருவர் நமக்கு இருவர் 2 ,இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் . இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே ,
சக சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரச்சிதா . திருமணமாகி பல வருடங்களாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் . மேலும் விவாகரத்துக்கு பிறகு,
சீரியல் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களிலும் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகை ரச்சிதா . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ரச்சிதா ஒரு நிகழ்ச்சிக்காக சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு மாறிய,
புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் என்ன ரச்சிதா இதெல்லாம்.? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …