April 26, 2024

தப்பை உணர்ந்த வடிவேலு ..!! ராஜ்கிரணை பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுத வைகைப்புயல் ..!! இவரைப்போய் தப்பா பேசிட்டோமே ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் . சினிமா மீது இருந்த ஆசையில் மதுரையில் இருந்து சென்னைக்கு கிளம்பி வந்த வடிவேலுவுக்கு முதல் வாய்ப்பை கொடுத்தவர் ராஜ்கிரண் தான்.  அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார் வடிவேலு .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சின்ன கவுண்டர், தேவர் மகன், அரண்மனைக்கிளி ,கிழக்கு சீமையிலே போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இதன் பிறகு ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தார் வடிவேலு.

ஆனால் பெயர் புகழை சந்தித்ததும் வடிவேலுவுக்கு கொஞ்சம் ஆணவமும் அதிகம் ஆனது என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி ஆரம்ப காலகட்டங்களில் வடிவேலுவை தூக்கிவிட்ட ராஜ்கிரண், விஜயகாந்த் போன்ற பல பிரபலங்களை உதாசீனப்படுத்தினார் வடிவேலு .

குறிப்பாக கேப்டன் விஜயகாந்தின் இறப்பிற்கு வடிவேலு வராததால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அவர் மீது சரியான கோபத்தில் இருந்து வருகின்றனர் . இந்நிலையில் கலைஞர் 100 விழாவில் கலந்து கொண்ட வடிவேலு ராஜ்கிரணை  மதிக்கவில்லை என்று செய்திகள் வெளியானது.

ஆனால் உண்மையில் அது நடக்கவில்லையாம் . ராஜ்கிரணை  பார்த்ததும் கட்டித் தழுவி கண்ணீர் விட்டிருக்கிறார் வடிவேலு . அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *