தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் . சினிமா மீது இருந்த ஆசையில் மதுரையில் இருந்து சென்னைக்கு கிளம்பி வந்த வடிவேலுவுக்கு முதல் வாய்ப்பை கொடுத்தவர் ராஜ்கிரண் தான். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார் வடிவேலு .
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சின்ன கவுண்டர், தேவர் மகன், அரண்மனைக்கிளி ,கிழக்கு சீமையிலே போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இதன் பிறகு ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தார் வடிவேலு.
ஆனால் பெயர் புகழை சந்தித்ததும் வடிவேலுவுக்கு கொஞ்சம் ஆணவமும் அதிகம் ஆனது என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி ஆரம்ப காலகட்டங்களில் வடிவேலுவை தூக்கிவிட்ட ராஜ்கிரண், விஜயகாந்த் போன்ற பல பிரபலங்களை உதாசீனப்படுத்தினார் வடிவேலு .
குறிப்பாக கேப்டன் விஜயகாந்தின் இறப்பிற்கு வடிவேலு வராததால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அவர் மீது சரியான கோபத்தில் இருந்து வருகின்றனர் . இந்நிலையில் கலைஞர் 100 விழாவில் கலந்து கொண்ட வடிவேலு ராஜ்கிரணை மதிக்கவில்லை என்று செய்திகள் வெளியானது.
ஆனால் உண்மையில் அது நடக்கவில்லையாம் . ராஜ்கிரணை பார்த்ததும் கட்டித் தழுவி கண்ணீர் விட்டிருக்கிறார் வடிவேலு . அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…