பிரியங்கா நல்காரி ஓர் பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார். தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய பிரியங்கா நல்காரி தமிழில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு ,காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதன் பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் .
இந்த சீரியல் இவரை பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த சீரியலைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சீதாராமன் , நளதமயந்தி போன்ற சீரியல்களிலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்று இருந்தார் பிரியங்கா.
இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த வருடம் ராகுல் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் . மேலும் திருமணத்துக்கு பிறகு நடிப்பதை விட்டு விலகிய பிரியங்கா நல்காரி சமீபத்தில் தான் திரும்பவும் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ,
சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கணவருடன் எடுத்த எல்லா புகைப்படங்களையும் நீக்கி இருக்கிறார் நடிகை பிரியங்கா நல்காரி .அது மட்டுமல்லாமல் சமீபத்திய பேட்டிகளில் சிங்கிள் என்று தான் கூறி வருகிறார் . இதனால் கல்யாணமான ஒரே வருடத்திலேயே பிரியங்கா நல்காரி,
கணவரை பிரிந்து விட்டாரா .? இவர்களுடைய பிரிவுக்கு என்ன காரணம் .? என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் பிரியங்கா நல்காரியும் அவருடைய கணவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது…