April 26, 2024

அம்மா வளர்ப்பு தப்பா போகாது ..!! சிவகார்த்திகேயனை நம்பி வீட்டிலேயே தங்கிய இளம் நடிகை ..!! உண்மையை சொல்லிய டி இமானின் நண்பர் ..!!

தமிழ் சினிமா உலகில் நல்ல பெயருடன் இருந்து வந்த நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் . குறிப்பாக ரசிகர்களின் பேவரைட் நடிகராக இருந்து வந்த சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று பகீர் கிளப்பி இருந்தார் டி இமான்.  இதனால் சிவகார்த்திகேயனின் பெயர் அப்படியே டேமேஜ் ஆனது. இது குறித்து சிவகார்த்திகேயனும் வாய் திறக்காததால் பலரும்,

கண்டமேனிக்கு பேச தொடங்கி விட்டார்கள் . இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் பற்றிய உண்மைகளை வெளிப்படையாக கூறியுள்ளார் டி இமானின் நண்பர் ஒருவர் . அந்த வகையில் கூறியதாவது , நான் நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முதலில் சந்தித்தது,

சிவகார்த்திகேயன் வீட்டில் தான் . மேலும் சிவகார்த்திகேயனின் நல்ல குணத்தை தெரிந்து கொண்ட கீர்த்தி சுரேஷின் அம்மா தான் அவரை அங்க தங்க வைத்திருக்கிறார் . மேலும் அப்போது கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனின் மனைவியான ஆர்த்தியும் சேர்ந்துதான் வீட்டில் இருப்பார்கள்.

மேலும் சிவகார்த்திகேயன் அப்பா இறந்த பிறகு அம்மா வளர்ப்பில் வளர்ந்ததால் அவருக்கு தவறான புத்தி என்பது சுத்தமாக கிடையாது . இன்னும் சொல்லப்போனால் இத்தனை வருடமாக சினிமாவில் இருந்தும் சிகரெட் , மது போன்ற எந்த கெட்ட பழக்கமும் சிவகார்த்திகேயனுக்கு கிடையாது.

இப்படி இருந்த நேரத்தில் தனக்கு மார்க்கெட் குறைந்ததும் சிவகார்த்திகேயனை எப்படியாவது கெடுத்து விட வேண்டும் என்பதற்காகத்தான் இமான் இப்படி செய்ததாக கூறியிருந்தார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் இது தெரியாமல் சிவக்கார்த்திகேயனை தப்பா நினைச்சுட்டோமே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *