April 28, 2024

என்னை சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை..!! 34 வயதாகியும் தனியாக இருக்கும் ” சிவா மனசுல சக்தி ” பட நடிகை ..!! என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்க ..??

தமிழ் சினிமா உலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சிவா மனசுல சக்தி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அனுயா.  இப்படி வெளியான முதல் படத்திலேயே  தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகை அனுயா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஹரிகுமார் நடிப்பில் வெளியான மதுரை சம்பவம் ,

சுந்தர் சி நடிப்பில் வெளியான நகரம் ,விஜய் நடிப்பில் வெளியான நண்பன் ,விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான நான் , போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை அனுயா.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி படங்களிலும்,

நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் கடந்த 9 வருடமாக சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் நடிகை அனுயா.  இப்படி இருக்கும் நிலையில் 34 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நடிகை  அனுயா தன்னுடைய திருமணம் குறித்து ,

கூறியதாவது , படிப்பை முடித்த உடனே நான் சினிமாவிற்கு வந்து விட்டேன்.  என்னை பல நடிகர்களோடு இணைத்து தவறாக பேசியிருந்தார்கள் . அவை அனைத்துமே தவறான தகவல் தான்.  நான் இப்போதும் தனியாகத்தான் இருக்கிறேன் . இதைப் பார்த்த ரசிகர் ஒருவர் ,

ஏன் தனியாக இருக்கிறார்கள்.? திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டு இருக்கிறார் . இதற்கு பதில் அளித்த அனுயா என்னை சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை என்று கூறியுள்ளார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *