April 29, 2024

நல்ல வேளை வீட்டை உயரமாக கட்டியதால் ..!! நான் தப்பித்து விட்டேன்..!! கார் மீது அமர்ந்து வீடியோ போட்ட பிரபல நடிகர் ..!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம்  புயல் சென்னையையே புரட்டி எடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.  மேலும் இதற்கு முன்பு கஜா புயலால் சென்னை மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.  அதன் பிறகு பல வருடங்கள் கழித்து இப்படி ஒரு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் சென்னை மக்கள்.  மேலும் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து பல பேர் அன்றாட வாழ்வையே ,

வாழ முடியாமல் தவித்து வருகின்றனர்.  இப்படி இருக்கும் நிலையில் நான் கொஞ்சம் வீட்டை உயரமாக கட்டியதால் தப்பித்து விட்டேன் என்று கூறியிருந்தார் பிரபல நடிகர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகர் மன்சூர் அலிகான் தான்.  தன்னுடைய கார் மீது ஏறி அமர்ந்து ,

வீடியோ ஒன்றை போட்ட மன்சூர் அலிகான் அதில் கூறியதாவது,  நான் அரும்பாக்கத்தில் இருக்கிறேன் . கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரத்தில் தான் கூவம் ஆறு இருக்கிறது.  எல்லோருமே வீட்டை தாழ்வாக கட்டிட்டாங்க,  நல்ல வேலையாக நான் வீட்டை கொஞ்சம் உயரமாக கட்டியதால்,

தப்பித்து விட்டேன்.  ஆனால் வெள்ளத்தால் வீட்டிற்குள் மீன் வந்துடுச்சு.  மீன் வருவது மிகப்பெரிய அதிசயம் , வறுத்து சாப்பிட்டது போக மிச்சம் இருக்கு , இனி அதையும் பொரிச்சு சாப்பிடணும் என்று காமெடியாக கூறியிருந்தார் நடிகர் மன்சூர் அலிகான்.

தற்போது அவர் பேசிய வீடியோ இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *