அண்மைக்காலமாக விஜய் தொலைக்காட்சிகளில் இருந்து தான் பலர் தரமான கலைஞர்கள் உருவாகி வருகின்றனர். அப்படி குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வரும் பிரபலங்களில் ஒருவர்தான் கே பி ஒய் பாலா . ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த,
பாலா பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்று ரசிகர்களை கவர்ந்தார். இப்படி சின்னத்திரை நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டு வந்த பாலா வெள்ளித்திரையில் வெளியான தும்பா, நாய் சேகர் ,பிரண்ட்ஷிப் ,புலிக்குத்தி பாண்டி ,ஜுங்கா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .
இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் இருக்கும் பல பிரபலங்கள் தங்களுக்காக புதிய கார்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால் கே பி ஒய் பாலா மட்டும் சுயநலமாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து இருக்கிறார் .
அந்த வகையில் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு மலைவாழ் மக்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார் கே பி ஒய் பாலா . மேலும் கிட்டத்தட்ட 8000 பேர் வாழும் அந்த கிராமத்தில் ஆம்புலன்ஸ் வசதியே கிடையாதாம்.
இதனால் அங்கு பல இறந்து விட்டார்களாம் . இந்நிலையில் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார் பாலா . இதைப் பார்த்த ரசிகர்கள் தற்போது பாலாவுக்கு தங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…
View this post on Instagram