90 களில் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை கௌசல்யா . கடந்த 1997 ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கௌசல்யா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நேருக்கு நேர், பிரியமுடன் ,சொல்லாமலே, ஆசையில் ஒரு கடிதம், வானத்தைப்போல, மனதை திருடி விட்டாய், போன்ற பல திரைப்படங்களில்,
நடித்திருந்தார் நடிகை கௌசல்யா. மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . பின்னர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய நடிகை கௌசல்யா பல வருடங்கள் கழித்து ,
பழையபடி மீண்டும் நடித்து வருகிறார் . அதோடு இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துக்கொண்டு வருகிறார் . மேலும் இவர் சினிமாவை விட்டு விலகியதற்கு காரணமே அவருடைய உடல் எடையால் தானாம். அந்த வகையில் 105 கிலோ இருந்த,
நடிகை கௌசல்யா தற்போது 70 கிலோவுக்கு மாறிவிட்டாராம். உடல் எடை அதிகரித்ததும் மருத்துவர்களை ஆலோசனை செய்த போது அவர்கள் இவருக்கு சரியான பதில் சொல்லவில்லையாம். இதன் பிறகு பசியை கட்டுப்படுத்த ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொண்டாராம்,
நடிகை கௌசல்யா. பின்னர் உடற்பயிற்சி செய்தும் உணவுகளை குறைத்துக் கொண்டும் இருந்திருக்கிறார். இதன் பிறகு ஒரு வருடத்தில் உடல் எடை தானாகவே குறைந்ததாக கூறியிருந்தார் நடிகை கௌசல்யா…